03 September 2011

ஹிஜாப்....!!!




பத்திரமயிருக்கிறேன்...
எனக்குள் - நான்
மிக மிகப்பத்திரமாய்....!!!

எச்சில் இலைமீதான
இலையான்களைப்போல
எவர் கண்ணும்
என்னை
அசிங்கப்படுத்துவதும் இல்லை...!!!

ரீக்கடை தாண்டி
நடந்து போகையில்...
எல்லோர் கவனமும் பறித்து
என்னைப்பற்றியே
விமர்சித்துத் தொலைத்து
பாவங்களால் நிரம்பிவழிய...
வாய்ப்பளிப்பதில்லை- நான்...!!!

என்னைப்
பின்தொடர்ந்து வா...
விசிலடி..!!!!
கேலிசெய்....!!!
என யாரையும்...
என் உடைகளால்
சீண்டிவிடுவதில்லை நான்...!!!

வகுப்பறைகளிலும்...
பாடப்புத்தகம் மீதான
அடுத்தவர் கண்களை
ஒருபோதும்
கிழித்துப்போடுவதில்லை-நான்!!!

விழிகளால் ஊரே ரசித்து...
கழித்துப்போட்ட
எச்சில் பண்டமாய்
எப்போதும் இருந்ததில்லை - நான்!!!


அல்லாஹ்வின் கட்டளைகளில்;
கணவனின் கண்களில்;
நான் மிகப்பெரும்
அழகியாய்
உயர்ந்துநிற்கிறேன்...!!!

அறியாமையினால்;
இவர்கள்தான்
உரத்துக்கூவுகிரார்கள்....
ஹிஜாப்
அடக்குமுறையென்று!!!!!!!!!


பாவம் அவர்கள்....;
.......................
அநாவசிய பார்வைகளை....
அந்நியரின் விமர்சனங்களை ....
அனாச்சாரங்களை ....
அடக்கிவைக்கும்
அதிஉன்னத ஆயுதம்....
ஹிஜாப்
என்பதை அறியாமல்....!!!!

04 August 2011

கா.....கா....




அதிகாலையின் அழகை............
காகங்கள் மட்டுமே;
காலங்காலமாய்
அனுபவித்துக்கொண்டிருக்கின்றன !!!








13 July 2011

பட்டிணி.....!!!




பசிப்பதாய்ச்சொல்லி ...
உரத்தழவும்
திராணியற்று....
உட்கார்ந்திருக்கிறது...
ஒரு _ ஜீவன்..!!!

''தங்க மகள் !
அச்சா மகள்..!
ஆ......க் காட்டு
ஒருவாய் தின்னென்று''
சோறூட்டும்
உம்மா நமக்கு....!!!!

''இராச்சோறு
தின்னாவிட்டால்
யானைப்பலம்
குறையுமென்று''
தூக்கத்தில் எழுப்பி....
உணவூட்டும்
வாப்பா_ நமக்கு...!!!!

பிடித்த கறி
சமைக்காவிட்டால்...
பிடிவாதமாய்
பட்டிணிகிடந்தே....
உம்மாவை நோகடிக்கும் ..
திமிர் _ நமக்கு...!!!

எத்தனை நாள்
ருசிருசியாய்
சமைத்துப்போட்டும்
கொஞ்சமாய் _ ஒருநாள்
உப்புக்குறைந்தாலும்...
''என்ன கறி??'' என்று
முகம் சுழிக்கும்
மனம் - நமக்கு....!!!

கடைத்தெருவில்;
கண்டதையெல்லாம்
தின்றுதள்ளி...
கொலஸ்ரோலும்...
சீனியுமாய்.....
வியாதிகளும்_நமக்கு....!!!

அவர்கள்...
இல்லாமல் அழுகிறார்கள்....!!!!
நாங்கள் ...
இருப்பதனால் அழுகிறோம்...!!!

யா...அல்லாஹ் ..
அவர்களுக்கும்..
எங்களுக்கும்
உணவில்
பரக்கத்துச் செய்வாயாக....!!!!
ஆமீன்....!

24 March 2011

வெளிநாட்டுச் செய்திகள்....!!!



வறுமையும்
இந்த கிடுகு குடிசையும் தான்
மத்திய கிழக்கு மண்ணை
நோக்கி
என்னை
தூர நகர்த்திட்று....

தோளில் பயணப்பொதிகளின்
சுமைகளோடும்....
மனசு பூராவும்
எம்மாத்திரம்
ரணங்களோடும்
போய்வருவதாய் சொல்லி
விடைபெறுகிறேன்.....

அப்போதைக்கு
யாரும் என்னை
தடுத்து நிறுத்தவேயில்லை!!!
குழந்தைகள்
குதூகலிப்பிழந்து....
கண்களைகசக்க
வீட்டு மூலையில் இருந்து
உம்மாவின்
முணகல் சத்தம்!!!

"அவர் "
தலைகவிழ்ந்தபடி
பேசாமல் நிற்க
நான் விடைபெற்றேன்!!!

மத்திய கிழக்கு மண்ணை நோக்கி
என் விலாசம் நகர்த்தி....
பணிப்பெண்ணாய்
இப்போதைக்கு நான்

சொல்லமுடியாத
துயரங்களுக்கு நடுவிலும்
புழுவாய் நெளிந்து.....
ஊறிப்பொழிந்த
வியர்வைகளை
பத்திரப்படுத்தி பணமாக்கி
என் விலாசம் நோக்கி
நகர்த்தி

சில வருடங்களின்
தொலைவில்
"அவருக்குப்பிடிக்கும்"
குழந்தைகளுக்குப்பிடிக்கும்
என
வாங்கிக்குவித்ததை எல்லாம்
தோள்களில் சுமந்தபடி..
மறுபடியும்
என்
பிறந்த மண்ணில்
வந்து வீழ்கிறேன்!!!!

எம்மாத்திரம் சந்தோசம்
எம்மாத்திரம் கனவு....
ஊரே மாறிப்போயிருந்தது;
கிடுகு வேலிகள் தொலைந்து
மதில்களில் ஒரு
கம்பீரம் தெரிந்தது.....
அரைகுறையாய் கிடந்த
வீடுகள் எல்லாம்
நாகரீகத்துக்குள்
பக்குவப்பட்டிருந்தன.....!!!

விரைவைக்கூட்டி நடக்கிறேன்
வீடு வந்தது....

முற்றத்திலேயே
முறிந்து விழுந்தது
என் - முகம் !!!!!!!!!!!!!

போகும் போதிருந்ததை விடவும்
பொத்தல் விழுந்து
இத்து இறந்து போய்
என் - குடில் !!!

வயசுக்கு வந்த மகளோடு....
வயதான
என் - உம்மா

விஷயம் அறியாமல்
தேடிப்போனபோது
"அவர் "
நின்றிருந்தார் !!!
போகும்போது நின்றிருந்தாரே
தலைகவிழ்ந்தபடி ......
அப்படியேதான்
இப்போதும் நின்றிருந்தார்
அடுத்த தெருவில் இருக்கும்
இன்னொருத்தியின்
முற்றத்தில்...!!!!

07 February 2011

தேநீர்க்கோப்பை ....!!!




வெறும் சுடுநீரிலும்......
தேயிலைச்சாற்றிலும்...
சீனியும் இல்லை
ஒரு - தேநீர் கோப்பையின் சுவை...!!!

ஊசியாய்க்குத்தும்
குளிர்காற்றின் நடுவில்...
உன் - கரம் கோர்த்தபடி....
நடந்து....;
சாலையோரத்துக் கடைமுற்றத்தில்
பருகும்
தேநீரில் இருக்கிறது !!!

ஒவ்வொரு விடியற்காலையிலும்...
ஒரு கோப்பை தேநீரோடு.
உன்னை சந்திப்பதில்
இருக்கிறது.... !!!

நீ அறியாமல்
ரகசியமாய்....
ஒரு மிடர் பருகி...
மீதியை உனக்களிப்பதில்
இருக்கிறது.....!!!

நீ குடித்த
மிச்சத் தேநீரின்...
மீதித்துளியை;
பருகிவிட்டுப்போவதிலும்
இருக்கிறது.....!!!

ஒவ்வொருநாள் மாலையிலும்...
உனக்காக காத்திருப்பதிலும்....
சுவாரசியமாய் பேசிக்கொண்டே
பருகுவதிலும் இருக்கிறது...
தேநீரின் சுவை...!!!!

இப்போதெல்லாம்
நீயில்லா தனிமைகளில்...
ஆறிக்கிடந்து.........;
அநாவசியமாய்
இறங்கிச்செல்கிறது....
ஒரு தேநீர் கோப்பை...!!!

உனது அருகாமையைபோல்....
.......................
வெறும்....சுடுநீரால்...
தேயிலைச்சாறினால்..
இல்லை...
சீனியினாலோ
சுவையாகி .விடுவதில்லை...
ஒரு தேநீர் கோப்பை........!!!

25 December 2010

என்னமோ சொல்லணுமாம்...!!!



அன்பளிப்பாய் கிடைத்த, தங்கமுலாம்பூசிய குட்டி தாஜ்மஹால்



அதேதான் இப்படியும் ....





ஹய்....எவ்வ்வவ்வ்வ்ளோவு Bubles....





இன்றைக்கி மழை வருமா...???