11 September 2010

வாப்பாவுடனான பெருநாள்....!!!
















ஒரு கடமையைபோல
சாதாரனமாய்
கழிந்து விடுகிறது
நமது பெருநாள்கள்.....

மருதாணி வாசம்...
தெருவேகிலும்.............
பட்டாசுச்சத்தம்!

செவிகளில் மணக்கும்
தக்பீர் வாசம்...
எதிலும் ஒட்டாமல் என் மனசு...

தொழப்போகமுன்னரே.....
மஞ்சள் சோறும்
கோழிக்கறியுமாய்
ஒன்றாய் அமர்ந்து....
சாபிட்டதெல்லாம்
ஒருகாலம்.....

பெருநாள் காசுக்காய்
உங்களிடம் காத்துக்கிடந்ததில்...
சேர்ந்த காசுகளை
முழுத்தாளாய்...
உங்களிடமே;
மாற்றி எடுப்பதிலும்...
ஒரு சந்தோசம் இருந்தது வாப்பா !!!

இப்போதெல்லாம்;
நானே சம்பாதித்த காசு
கையிலிருக்கிறது.....
பழைய சந்தோசங்களில்லை....

வெறும் புத்தாடைகளோ;
மருதாணி வாசமோ...
விதவிதமான
பலகாரங்களாலோ;
காகித நோட்டுக்களாலோ..;
அழகாக்கி விடமுடியாது...
வாப்பாவின் இருப்பைபோல;
ஒரு பெருநாளை....


ஒவ்வொரு
பெருநாள் தொழுகையின்
பின்னாலும்...
ரகசியமாய் அழும்...
உம்மாவின் கண்நீருக்குப்பின்னால்
ஆயிரம் துயரங்களிருக்கும் ....

எப்படியோ.......
-------------------------
----------------------
வாப்பா!
கலைக்கப் படாத
புத்தாடைகளைபோல....
பத்திரமாய் இருக்கிறது....
பெருநாட்களிலான;
உங்களின் நினைவுகள்



றஹீமா பைஷல்

04 September 2010

என்னால முடியலம்மா...........


நிறுத்தும்மா....!!!
இனியும் முடியாது.....
இதற்குமேல் சுமக்க...

படிக்கச்சொல்லி
அடிக்கிறாய்....
கருவறையிலேயே
என் - வகுப்பறைபற்றி
கனவில் மிதக்கிறாய்.....

ஒரு கார்ட்டூன் பார்க்க
விடுவதில்லை....
பக்கத்துப் பெண்குழந்தைகளோடு...
சிரித்துப்பேச விடுவதில்லை...
ஊர் சுற்ற விடுவதில்லை...

புத்தகத்தோடு வருகிறாய்...
''எ போர் ஆப்பிள்..''
''பி போர் போல்...''
என எபோதும்
மிரட்டுகிறாய்.....

காலையிலும்
வகுப்பு...
மாலையிலும் வகுப்பு...
நீ என்ன பாரதியின் எதிரியா ???

விடியற் காலையிலேயே
அரட்டுகிறாய்.....
வெடவெடக்கும் குளிர்நீரில்
குளிப்பாட்டுகிறாய்....

பூச்சாண்டியின் பேர் சொல்லி
உணவூட்டி....
முதுகில் புத்தக மூட்டையை
மாட்டி....
நெருக்கி அடிக்கும்
ஆட்டோவில் என்னை
சொருகி விடுகிறாய்...
எல்லோரும்
என்னை நெருக்கிறாங்களே...
''ஐயோ முதுகு வலிக்குதே....''

கதறக்கதற
துரத்துகிறாய்...
போ .......

அவன பாரு
இவள பாரு...
எப்படி எழுதுறான்னு....
என்ன வடிவா ரைம் சொல்றான்னு...
இப்படியே சொல்லி
என்னை கொல்றியே...

எம்மா !!!
என்னால முடியலம்மா...........
'ஹோம் வொர்க்' பண்ண
நான் தூங்கறேன்....!!!!!