04 September 2010

என்னால முடியலம்மா...........


நிறுத்தும்மா....!!!
இனியும் முடியாது.....
இதற்குமேல் சுமக்க...

படிக்கச்சொல்லி
அடிக்கிறாய்....
கருவறையிலேயே
என் - வகுப்பறைபற்றி
கனவில் மிதக்கிறாய்.....

ஒரு கார்ட்டூன் பார்க்க
விடுவதில்லை....
பக்கத்துப் பெண்குழந்தைகளோடு...
சிரித்துப்பேச விடுவதில்லை...
ஊர் சுற்ற விடுவதில்லை...

புத்தகத்தோடு வருகிறாய்...
''எ போர் ஆப்பிள்..''
''பி போர் போல்...''
என எபோதும்
மிரட்டுகிறாய்.....

காலையிலும்
வகுப்பு...
மாலையிலும் வகுப்பு...
நீ என்ன பாரதியின் எதிரியா ???

விடியற் காலையிலேயே
அரட்டுகிறாய்.....
வெடவெடக்கும் குளிர்நீரில்
குளிப்பாட்டுகிறாய்....

பூச்சாண்டியின் பேர் சொல்லி
உணவூட்டி....
முதுகில் புத்தக மூட்டையை
மாட்டி....
நெருக்கி அடிக்கும்
ஆட்டோவில் என்னை
சொருகி விடுகிறாய்...
எல்லோரும்
என்னை நெருக்கிறாங்களே...
''ஐயோ முதுகு வலிக்குதே....''

கதறக்கதற
துரத்துகிறாய்...
போ .......

அவன பாரு
இவள பாரு...
எப்படி எழுதுறான்னு....
என்ன வடிவா ரைம் சொல்றான்னு...
இப்படியே சொல்லி
என்னை கொல்றியே...

எம்மா !!!
என்னால முடியலம்மா...........
'ஹோம் வொர்க்' பண்ண
நான் தூங்கறேன்....!!!!!

1 comment: