03 September 2011

ஹிஜாப்....!!!




பத்திரமயிருக்கிறேன்...
எனக்குள் - நான்
மிக மிகப்பத்திரமாய்....!!!

எச்சில் இலைமீதான
இலையான்களைப்போல
எவர் கண்ணும்
என்னை
அசிங்கப்படுத்துவதும் இல்லை...!!!

ரீக்கடை தாண்டி
நடந்து போகையில்...
எல்லோர் கவனமும் பறித்து
என்னைப்பற்றியே
விமர்சித்துத் தொலைத்து
பாவங்களால் நிரம்பிவழிய...
வாய்ப்பளிப்பதில்லை- நான்...!!!

என்னைப்
பின்தொடர்ந்து வா...
விசிலடி..!!!!
கேலிசெய்....!!!
என யாரையும்...
என் உடைகளால்
சீண்டிவிடுவதில்லை நான்...!!!

வகுப்பறைகளிலும்...
பாடப்புத்தகம் மீதான
அடுத்தவர் கண்களை
ஒருபோதும்
கிழித்துப்போடுவதில்லை-நான்!!!

விழிகளால் ஊரே ரசித்து...
கழித்துப்போட்ட
எச்சில் பண்டமாய்
எப்போதும் இருந்ததில்லை - நான்!!!


அல்லாஹ்வின் கட்டளைகளில்;
கணவனின் கண்களில்;
நான் மிகப்பெரும்
அழகியாய்
உயர்ந்துநிற்கிறேன்...!!!

அறியாமையினால்;
இவர்கள்தான்
உரத்துக்கூவுகிரார்கள்....
ஹிஜாப்
அடக்குமுறையென்று!!!!!!!!!


பாவம் அவர்கள்....;
.......................
அநாவசிய பார்வைகளை....
அந்நியரின் விமர்சனங்களை ....
அனாச்சாரங்களை ....
அடக்கிவைக்கும்
அதிஉன்னத ஆயுதம்....
ஹிஜாப்
என்பதை அறியாமல்....!!!!