13 July 2011

பட்டிணி.....!!!




பசிப்பதாய்ச்சொல்லி ...
உரத்தழவும்
திராணியற்று....
உட்கார்ந்திருக்கிறது...
ஒரு _ ஜீவன்..!!!

''தங்க மகள் !
அச்சா மகள்..!
ஆ......க் காட்டு
ஒருவாய் தின்னென்று''
சோறூட்டும்
உம்மா நமக்கு....!!!!

''இராச்சோறு
தின்னாவிட்டால்
யானைப்பலம்
குறையுமென்று''
தூக்கத்தில் எழுப்பி....
உணவூட்டும்
வாப்பா_ நமக்கு...!!!!

பிடித்த கறி
சமைக்காவிட்டால்...
பிடிவாதமாய்
பட்டிணிகிடந்தே....
உம்மாவை நோகடிக்கும் ..
திமிர் _ நமக்கு...!!!

எத்தனை நாள்
ருசிருசியாய்
சமைத்துப்போட்டும்
கொஞ்சமாய் _ ஒருநாள்
உப்புக்குறைந்தாலும்...
''என்ன கறி??'' என்று
முகம் சுழிக்கும்
மனம் - நமக்கு....!!!

கடைத்தெருவில்;
கண்டதையெல்லாம்
தின்றுதள்ளி...
கொலஸ்ரோலும்...
சீனியுமாய்.....
வியாதிகளும்_நமக்கு....!!!

அவர்கள்...
இல்லாமல் அழுகிறார்கள்....!!!!
நாங்கள் ...
இருப்பதனால் அழுகிறோம்...!!!

யா...அல்லாஹ் ..
அவர்களுக்கும்..
எங்களுக்கும்
உணவில்
பரக்கத்துச் செய்வாயாக....!!!!
ஆமீன்....!

1 comment:

  1. இதுவே போதும் என்றது ஏழை மணம்!
    இன்னும் வேண்டும் என்றது பணக்கார மணம்!

    ReplyDelete