04 June 2010

கடற்கரை.....


........

கால்கள்தான்
நடந்தன.................
மனசு குளிர்ந்தது!!!
கடற்கரையில்;


சிப்பிகள் சேகரிக்கும்
ஒரு குழந்தைத்தனமான
வயசிலும்.........
முதுமையிலுமாய்
வயசுகளுக்கு அப்பாற்பட்ட
அழகு
கடலில் மட்டுமே
இருக்கமுடியும்!!!


ஒரு அமைதியான
வாசிகசாலையின் ....
ஒரு மூலையில்
தனித்திருப்பதைப்போல
இந்தமணலில்.........
அமர்ந்திருத்தல்
கொள்ளைஅழகு!!!!


நட்சத்திரம் தெளித்து....
நிலா நிறைந்த
இரவுகளில்
பேசிக்கொள்ள
எவ்வளவோ இருக்கின்றன

குட்டிக் குட்டிக் கவிதைகள்
சொல்லிவிட்டு
திரும்பி ஓடும்
அலைகள்.....

கச்சான் விற்கும்
சிறுவன்!!

கால் புதையும்
மணல்!!!

என-ரசிப்பதற்கு
ஏராளமுண்டு..


ஆனாலும்
................
..................
மனிதர்களைப்போலவே;
வாசிக்க
விரும்பாத
இன்னுமொரு பக்கம்
கடலுக்கும் உண்டு
'சுனாமி' என்னும்
பயங்கரப்பெயரோடு


No comments:

Post a Comment