30 May 2010





மௌனம்...!!!

--------------------

வார்த்தைகள்
வலிக்குமென்று
மனசு சும்மா இருக்கப்
பிரியப்படும் ஒரு பொழுது
மௌனம்.....

வார்த்தைகளை
மிச்சம்பிடிக்கிற
யுத்தியல்ல....இது
உன்னைப்பற்றி
உனக்கே
உணரவைக்கும்
இன்னுமோருபாஷயின்
மொழிபெயர்ப்பு...!!

போதிமரத்தடியில்
புத்தனை
புதுப்பித்ததும்
இந்த மௌனமே

சுமக்கத்தெரிகிரபோது
மௌனம் - ஒரு
சுகமான பயணம்......!

தொட்டதும்
சிணுங்குகிற
சில்லறைகளை விடவும்....
மௌனமாய் கிடக்கிற
காகித நோட்டுகளுக்குத்தான்
கனத்தமரியாதை...!!

பகலெல்லாம்
கத்தியலைகிறது....
காகம்...!!
இதுபெரிய இழவென்று..
கடைசியில்
கல்லெறிகள் விழும்...
மௌனமாய்
காத்திருக்கவிட்டு....
கூவும்
குயிலோசயில்தான்
கொள்ளைப்பிரியம்..!!

வேறுவேலையின்றி
உளறியபடியே
கிடக்கும்...
கடல்..!
கடைசியில்
தாகமெடுக்கையில்....
தண்ணீர்தேடி
எங்கே போய் முட்டினாய்??
கடற்கரையிலா???
மௌனமாய்
கிடக்கிற
ஆறு குளம்
நோக்கித்தானே ஓட்டமெடுத்தாய்

மௌனம்
முற்றுப்புள்ளியல்ல...........
இன்னுமொருதுவக்கத்திர்கான
அஸ்திவாரம்...

எல்லா மௌனமும்
சம்மதத்திற்கான
அடையாளமாய்
ஒப்புக்கொண்டு
தப்புக்கனக்குப்போடாதே...

எப்படியோ....
சுமக்கத்தெரிகிரபோது
மௌனம் - ஒரு
சுகமான பயணம்......!

No comments:

Post a Comment