17 August 2010




பரீட்சை....

காலம் காலமாய்....
உசிரைத்தின்னும்
பரீட்சைகள்...

விளையாட்டுக்களெல்லாம்
ஓரங்கட்டப்படும்...
சட்டென பக்தி முற்றும்

பாடப்புத்தகங்கள்
வரிசையாய்;
மேசையில் அடுக்கி
அடிக்கடி
அளந்துபார்க்கப்படும்

டிவி பார்க்ககூடாது....
நேரத்துக்கு
எழும்பணும்...
பத்து மணிக்குமுன்னால்
தூங்கிவழியக்கூடாது...

பார்த்துப்பார்த்து
பத்திரமாய்
பரீட்சைக்கு தயாராகிவிடுகிறார்கள்
வீட்டிலிருக்கும்
எல்லோரும்;
..................................
எழுதப்போகும் என்னைத்தவிர...!!!!

பயமும் ...பயங்கரமுமாய்
தொடர்ந்து கொண்டே வருகிறது
பரீட்சைப்பூதம்......

பதின்மூன்று வருஷ
பள்ளிக்கூட வாழ்க்கை....;
பரீட்சை பேப்பர் களுக்கென்றே
தொலைந்து போயிற்று...!!

வயிறுவலிக்கும் ;
தலைசுற்றும்;
உடல் வியர்த்து ஊத்தும்;
இப்படித்தான்
ஒவ்வொரு பரீட்சைக்குமுன்னாலும்
உடலின் வானிலை அறிக்கை
மாறிவிடுகிறது...

பெருத்த மழை
பூகம்பம்...
மந்திரியின் மரணம்-என
ஏதாவது நடந்து
பரீட்சை தள்ளிப்போக வேணும் என்று
சுயநலமாய் சிந்திக்கும் பாழாய்ப்போன மனசு....

கடைசியில்..
எழுதிய பேப்பர்
தொலைந்து போகும்படியும்....
வைத்த நேர்த்திக்கடன்கள்
தோற்றுப்போகும்.....

பார்ப்பம் ;
அடுத்த பரீட்சைகேனும்
இதைவிட சிறப்பாய்
படித்தே தீருவேன்..! - என
ஒவ்வொரு பரீட்சைக்குப் பின்னாலும்
திட்டமிடுவதே வாடிக்கையாயிற்று ....

No comments:

Post a Comment