
அல்குர்ஆன்
கருவாப்பட்டையும்;
கராம்பும்...;
மிளகாய்த்தூள் இட்ட
புளியம்பழமும்தான்;
குர்ஆன்
மதரஸாவுக்கு...
நம்மை உற்சாகப்படுத்தும்!!
முதலில் மட்டை கழரும் ....
அடுத்தடுத்து
பக்கங்கள் கிழியும்....
அழுக்குச்சட்டையும்;
அலுப்புமாய் தொடரும்
பயணம்
சட்டென ஒருநாள்
முடிவுக்குவரும்
வீட்டு மூலைக்கு
குர்ஆன்கள்
இடம்மாறும்
மாசாலா உலகத்தில்
வெற்றுப்புத்தகங்களோடு மட்டும்
முட்டிக்கொண்டோம்...
ரமழான் மாசத்தின் போதும்.....
யாராகிலும்
உறவுக்காரர்கள்
மவுத்தாகிப்போகிறபோதும்
மட்டுமே
தூசு தட்டப்படுகிறது.........
நமது
குர்ஆன்கள் !!!!
ஏராளம் அதிசயங்களோடு ....
எல்லாப் பிரச்சினைக்குமான
அழகிய தீர்வோடு
கையிலிருக்கிறது
குர்ஆன்கள் !!!
நாம்தான்
ஓடிக்கொண்டிருக்கிறோம்.....
வாழ்க்கை வெறுத்த
வருத்தங்களோடு......
ஒரு சொட்டு
நேரம் ஒதுக்கு............
குர்ஆன் ஓது..!!!
அதன் பரவசத்தில்
மூழ்கு...............
அது சொல்லும் சேதிகளை
ஆழ்ந்து துலாவு....
இம்மை மறுமை
இரண்டும்..
அழகாகும்....
எழுத்துக்கு பத்தாய்
நன்மை தரும்
குர்ஆன்களை மறந்து...
.....
ஒன்றுக்கு ஒன்று!!!
இலவசமாம்....;
------------------------------
என்னும்
கடைகளில் ஏறி
முண்டியடிக்கிறது
சனங்கள்...........!!!!
இந்த ரமழான் மாதம்
முழுக்கவும்....!!!

நாம்தான்
ReplyDeleteஓடிக்கொண்டிருக்கிறோம்.....
வாழ்க்கை வெறுத்த
வருத்தங்களோடு...//
ரமலான் வாழ்த்துகள்!
நன்றிகள்
ReplyDeleteSuperb as usual.....
ReplyDeletethanks Amjad
ReplyDeleteஅருமையான கவிதை நல்ல கருத்துக்கள்..
ReplyDeleteகருத்துக்களுக்கு நன்றி...
ReplyDelete