
திட்டித்தீர்த்தபோதும்..
இவை
பேனா மையினைத்தான்
தீர்த்தமாய் அருந்தும்!!
சொல்ல முடியாத
ரகசியங்கள்
ரகசியங்களாகவே
இதில் இருந்துவிடுகின்றன
வசனங்களாய்
கொட்டு.................
சுமக்க முடியாமல் போன
வாழ்வின் துயரங்களை எல்லாம்!!!!
நேரங் கிடைக்கும்
பொழுதுகளிலெல்லாம்
நிறைய நிறைய பேசு
மனிதர்களைபோல
ரகசியங்களை சொல்லும்
அசிங்கங்களை
டைரிகள் செய்யவதும் இல்லை
உயிரில் உறையாத
உணர்வுகளை
உலரப்போடு.....!!!
மறக்கமுடியாத
சமாச்சாரங்களை;
மனசின் சந்தோசங்களை
சேமித்து வை;
வாழ்வின் கடைசிப்பக்கங்களுக்காய்....!!!
எதுவும் எழுதப்படாமல்
பெயரை மட்டுமே
சுமந்தபடி
சும்மாவே இருக்கும்
நிறைய்யப்பேரின்
டயரிகள்..!!!
டயரிகள்
சொல்லும் சேதிகள்
சுவாரசியம்தான்........
கவனம் ....!!!!!!!!!!!
அடுத்தவன் டயரி புரட்டி
அசிங்கப்படாதிருக்கட்டும்
நம்
விழிகள்!!!!!!!!!!!!!!
No comments:
Post a Comment