

ஒரு கடமையைபோல
சாதாரனமாய்
கழிந்து விடுகிறது
நமது பெருநாள்கள்.....
மருதாணி வாசம்...
தெருவேகிலும்.............
பட்டாசுச்சத்தம்!
செவிகளில் மணக்கும்
தக்பீர் வாசம்...
எதிலும் ஒட்டாமல் என் மனசு...
தொழப்போகமுன்னரே.....
மஞ்சள் சோறும்
கோழிக்கறியுமாய்
ஒன்றாய் அமர்ந்து....
சாபிட்டதெல்லாம்
ஒருகாலம்.....
பெருநாள் காசுக்காய்
உங்களிடம் காத்துக்கிடந்ததில்...
சேர்ந்த காசுகளை
முழுத்தாளாய்...
உங்களிடமே;
மாற்றி எடுப்பதிலும்...
ஒரு சந்தோசம் இருந்தது வாப்பா !!!
இப்போதெல்லாம்;
நானே சம்பாதித்த காசு
கையிலிருக்கிறது.....
பழைய சந்தோசங்களில்லை....
வெறும் புத்தாடைகளோ;
மருதாணி வாசமோ...
விதவிதமான
பலகாரங்களாலோ;
காகித நோட்டுக்களாலோ..;
அழகாக்கி விடமுடியாது...
வாப்பாவின் இருப்பைபோல;
ஒரு பெருநாளை....
ஒவ்வொரு
பெருநாள் தொழுகையின்
பின்னாலும்...
ரகசியமாய் அழும்...
உம்மாவின் கண்நீருக்குப்பின்னால்
ஆயிரம் துயரங்களிருக்கும் ....
எப்படியோ.......
-------------------------
----------------------
வாப்பா!
கலைக்கப் படாத
புத்தாடைகளைபோல....
பத்திரமாய் இருக்கிறது....
பெருநாட்களிலான;
உங்களின் நினைவுகள்
றஹீமா பைஷல்